/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துணை கமிஷனர்களுக்கு பொறுப்பு, அதிகாரம் பிரிப்பு
/
துணை கமிஷனர்களுக்கு பொறுப்பு, அதிகாரம் பிரிப்பு
ADDED : ஜன 14, 2025 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை மாநகராட்சிக்கு துணை கமிஷனர்களாக குமரேசன், சுல்தானா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் கவனிக்க வேண்டிய துறைகள் மற்றும் பொறுப்புகளை பிரித்து, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டிருக்கிறார். கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டல பணிகள் துணை கமிஷனர் குமரேசனுக்கும், வடக்கு மற்றும் மேற்கு மண்டல பணிகள் துணை கமிஷனர் சுல்தானாவுக்கும் பிரித்து, அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.