sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தி.மு.க. அலுவலகத்தில் ரகளை; முன்னாள் போலீஸ்காரர் கைது

/

தி.மு.க. அலுவலகத்தில் ரகளை; முன்னாள் போலீஸ்காரர் கைது

தி.மு.க. அலுவலகத்தில் ரகளை; முன்னாள் போலீஸ்காரர் கைது

தி.மு.க. அலுவலகத்தில் ரகளை; முன்னாள் போலீஸ்காரர் கைது


ADDED : ஆக 24, 2025 11:58 PM

Google News

ADDED : ஆக 24, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; தி.மு.க., அலுவலகத்தில் தகராறில் ஈடுபட்ட முன்னாள் போலீஸ்காரர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கோவை ரத்தினபுரி ஜீவானந்தம் ரோட்டில் தி.மு.க., கிளை அலுவலகம் உள்ளது. இங்கு வரும் தி.மு.க., கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் செய்தித்தாள்கள் படிப்பது, கேரம் விளையாடுவது போன்ற பணிகளில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் அங்கு தி.மு.க., -வினர் கேரம் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் அவர்களை அங்கிருந்து காலி செய்யுமாறு தெரிவித்தார்.

தொடர்ந்து இங்கு யாரும் விளையாடக்கூடாது எனக் கூறி, அவர்களை வெளியேற்றி விட்டு அலுவலக ஷட்டரை மூட முயன்று ரகளையில் ஈடுபட்டார். இதுகுறித்து ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று ரகளையில் ஈடுபட்டவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் ரத்தினபுரி பெரியசாமி லே-அவுட்டை சேர்ந்த வினோத்குமார், 45 எனத் தெரிந்தது. வினோத்குமார் கோவை மாநகர போலீஸில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து, டிஸ்மிஸ் ஆனவர் என்பதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் பிணையில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us