sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சீரான குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியல்

/

சீரான குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியல்

சீரான குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியல்

சீரான குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியல்


ADDED : மார் 07, 2024 11:36 AM

Google News

ADDED : மார் 07, 2024 11:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:சீரான குடிநீர் வழங்கக் கோரி, காரமடை அருகே பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மருதூர் ஊராட்சியில், 12 வார்டுகள் உள்ளன. பெரும்பாலான வார்டுகளுக்கு, ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது.

இந்த ஊராட்சிக்கு உட்பட்ட, 4, 5, 6 ஆகிய வார்டுகளில், திம்மம்பாளையம், ராம்நகர், என்.ஜி.புதூர், ஏ.டி. காலனி, கே.எஸ்.பி., கார்டன், ஏழு சுழி, மகாலட்சுமி நகர் ஆகிய பகுதிகள் உள்ளன.

இந்த பகுதிகளுக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை. அதனால் நேற்று, 11:00 மணிக்கு, பொதுமக்கள் காலிக்குடத்துடன் திம்மபாளையத்தில் காரமடை தோலம்பாளையம் சாலையில் மறியல் செய்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு, காரமடை போலீசார் மற்றும் பி.டி.ஓ., மகேஸ்வரி ஆகியோர் வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாலைக்குள் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக உறுதி அளித்ததை அடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் காரமடை தோலம்பாளையம் சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.






      Dinamalar
      Follow us