sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காட்டம்பட்டியில் சாலை விரிவாக்கம்; 57 மரங்கள் மறுநடவுப்பணி தீவிரம்

/

காட்டம்பட்டியில் சாலை விரிவாக்கம்; 57 மரங்கள் மறுநடவுப்பணி தீவிரம்

காட்டம்பட்டியில் சாலை விரிவாக்கம்; 57 மரங்கள் மறுநடவுப்பணி தீவிரம்

காட்டம்பட்டியில் சாலை விரிவாக்கம்; 57 மரங்கள் மறுநடவுப்பணி தீவிரம்


ADDED : பிப் 04, 2025 11:50 PM

Google News

ADDED : பிப் 04, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பல்லடம் - பொள்ளாச்சி சாலை விரிவாக்கத்துக்காக, மரங்கள் மறுநடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

அவிநாசி - திருப்பூர் - பல்லடம் - பொள்ளாச்சி - கொச்சின் (வழி) மீன்கரை ரோட்டில் காட்டம்பட்டி, நெகமம், புளியம்பட்டி, மீனாட்சிபுரம் பகுதிகளில், இருவழிச்சாலை, நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 37 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடக்கிறது. அதில், கிணத்துக்கடவு நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்துக்கு உட்பட்ட காட்டம்பட்டி பகுதியில், 1,600 மீட்டர் சாலைப்பகுதி நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சாலை விரிவாக்கத்துக்காக அங்கிருந்த மரங்கள் மறுநடவு செய்யும் பணிகளில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மரங்கள் மறுநடவு சிறப்பு நிபுணர் சையது மற்றும் இயற்கை ஆர்வலர்களுடன் இணைந்து இப்பணியை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சாலை விரிவாக்கத்துக்காக மொத்தம், 57 மரங்கள் கண்டறியப்பட்டு, மறுநடவு செய்யப்படுகின்றன.

மரங்களை வெட்டாமல் அவற்றை பாதுகாக்க மாற்று இடத்தில் நடவு செய்யப்படுகிறது,' என்றனர்.






      Dinamalar
      Follow us