ADDED : மார் 06, 2026 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: செல்வபுரம், தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் வேலுமணி,40. நேற்று முன்தினம் கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவுக்கு வந்தார்.
பேரூர் மெயின் ரோடு, செட்டி வீதி அருகே இரவில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது, கெம்பட்டி காலனியை சேர்ந்த நாகராஜ், 21, கத்தியை காட்டி மிரட்டி, வேலுமணியிடமிருந்து ரூ.3,100 பறித்து தலைமறைவானார். புகாரின் பேரில், செல்வபுரம் போலீசார், நாகராஜை சிறையில் அடைத்தனர்.

