sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போக்குவரத்து போலீஸ் விதித்த ரூ.6.57 கோடி அபராதம் பாக்கி

/

போக்குவரத்து போலீஸ் விதித்த ரூ.6.57 கோடி அபராதம் பாக்கி

போக்குவரத்து போலீஸ் விதித்த ரூ.6.57 கோடி அபராதம் பாக்கி

போக்குவரத்து போலீஸ் விதித்த ரூ.6.57 கோடி அபராதம் பாக்கி


ADDED : ஆக 20, 2025 11:28 PM

Google News

ADDED : ஆக 20, 2025 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:போக்குவரத்து விதி மீறலை கண்டறிந்து, போலீசார் விதித்த அபராதத் தொகையில், இன்னும் 6.57 கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் உள்ளது. இத்தொகையை வசூலிப்பதற்கான முயற்சியில், போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கோவை நகர்ப்பகுதியில் போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிய, சிக்னல்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேமராக்களின் படங்களை ஆதாரமாகக் கொண்டு, அபராதம் விதிக்கப்படுகிறது.

போலீசாரும் மொபைல் போனில் படம் எடுத்து, செயலியில் பதிவேற்றம் செய்கின்றனர். அபராதத் தொகை விபரம், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டியின் மொபைல் போனுக்கு செல்லும்.

கோவை மாநகர போக்குவரத்து போலீசாரால், ஏழு மாதங்களில், 75,908 வழக்குகள் பதிவு செய்து, 7.06 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதில், 5,096 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இதுவரை, 49.86 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இன்னும், 6.57 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்படாமல் உள்ளது. இத்தொகையை வசூலிக்க, போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

'உடனே அபராதம் செலுத்துவதில்லை' கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் கூறுகையில், ''விதிமீறல் வாகனங்களுக்கு விதிக்கும் அபராதத்தை, உடனடியாக செலுத்த வாகன ஓட்டிகள் முன்வருவதில்லை. அபராதம் செலுத்தாதவர்களை, பல முறை தொடர்பு கொள்கிறோம். மீதமுள்ள அபராதத் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.








      Dinamalar
      Follow us