/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாசாணியம்மன் கோவிலில் ரூ.84.34 லட்சம் காணிக்கை
/
மாசாணியம்மன் கோவிலில் ரூ.84.34 லட்சம் காணிக்கை
ADDED : நவ 28, 2025 03:32 AM
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக, 84 லட்சத்து, 34 ஆயிரத்து, 488 ரூபாய் இருந்தது.
ஆனைமலையில் மாசாணியம்மன் கோவிலில், பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில், தட்டு காணிக்கை உண்டியல்கள், 22 நிரந்தர உண்டியல்கள், திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. சலவநாயக்கன்பட்டி ஊர் பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
நிரந்தர உண்டியலில், 65 லட்சத்து, இரண்டாயிரத்து, 192 ரூபாய்; தட்டு காணிக்கை உண்டியலில், 19 லட்சத்து, 32 ஆயிரத்து, 296 ரூபாய் இருந்தது. மொத்த காணிக்கையாக, 84 லட்சத்து, 34 ஆயிரத்து, 488 ரூபாய் இருந்தது.
மேலும், தங்கம், 242 கிராம்; வெள்ளி, 575 கிராமும் இருந்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, ஈச்சனாரி விநாயகர் கோவில் உதவி ஆணையர் ரத்தினாம்பாள், மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் முத்துராமலிங்கம், தக்கார் பிரதிநிதி ஆனைமலை ஆய்வர் சித்ரா முன்னிலையில் நடைபெற்றது.

