/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சச்சிதானந்த பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
/
சச்சிதானந்த பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 14, 2025 11:52 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் சச்சிதானந்த பள்ளி, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில்,100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
மேட்டுப்பாளையம் கல்லாறில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பிளஸ் 2 தேர்வில் மாணவி பவன்யா 500க்கு 485 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், ரிதன்யாஸ்ரீ 480 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், ஜீவன்யா 465 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர். அதேபோன்று இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வில் ரித்வின் 490 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம், விஷால் 478 பெற்று இரண்டாம் இடத்தையும், ரித்திக் 477 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர். 69 பேர் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி, செயலர் கவிதாசன், பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.