/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சக்தி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா துவக்கம்
/
சக்தி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா துவக்கம்
சக்தி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா துவக்கம்
சக்தி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா துவக்கம்
ADDED : மார் 26, 2025 10:12 PM
அன்னுார்:
குன்னத்தூராம்பாளையம், சக்தி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நேற்றுமுன்தினம் துவங்கியது.
குன்னத்தூராம்பாளையம், ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழாவில், கடந்த 23ம் தேதி கிராம சாந்தி நடந்தது. நேற்றுமுன்தினம் காலை 7:00 மணிக்கு வேள்வி வழிபாடு, பிள்ளையார் வழிபாடு நடந்தது. திருவிழா கொடியேற்றப்பட்டது. மாலையில் அம்மனுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. இதையடுத்து பூச்சாட்டு திருவிழா துவங்கியது.
வருகிற 31ம் தேதி வரை தினமும் மாலையில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. வரும் 1ம் தேதி கம்பம் நடப்படுகிறது. 8ம் தேதி இரவு அணிக்கூடை மற்றும் தீர்த்த குடம் எடுத்து வருதலும், கரகம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தலும் நடக்கிறது.
வருகிற 9ம் தேதி காலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், மாவிளக்கு எடுத்தலும், பொங்கல் வைத்தலும், நடைபெறுகிறது. இரவு கம்பம் கலைக்கப்படுகிறது. வரும் 10ம் தேதி எருது விரட்டும் வைபவம் நடக்கிறது. இரவு அச்சம் பாளையம் சண்முகம் குழுவின் பஜனை நடக்கிறது.