/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மை பணியாளர்கள் நாளை போராட்டம்
/
துாய்மை பணியாளர்கள் நாளை போராட்டம்
ADDED : பிப் 20, 2026 04:44 AM
வால்பாறை: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி, துாய்மை பணியாளர்கள் நாளை (21ம் தேதி) போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
வால்பாறை நகராட்சியில், ஒப்பந்த அடிப்படையில், 55 துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களை தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தப்படி இன்று வரை பணி நிரந்தரம் செய்யவில்லை.
இது குறித்து துாய்மை பணியாளர்கள் கூறியதாவது:
வால்பாறை நகராட்சியில், கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில், 55 துாய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்வதாக கடந்த சட்டசபை தேர்தலில் ஆளும்கட்சியினர் தேர்தல் வாக்குறுதி வழங்கினர்.
ஆனால், இன்று வரை எங்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. எனவே, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாத தமிழ அரசை கண்டித்து 21ம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு, கூறினர்.

