sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'மகிழ் முற்றம்' சார்பில் மரக்கன்று நடும் விழா

/

'மகிழ் முற்றம்' சார்பில் மரக்கன்று நடும் விழா

'மகிழ் முற்றம்' சார்பில் மரக்கன்று நடும் விழா

'மகிழ் முற்றம்' சார்பில் மரக்கன்று நடும் விழா


ADDED : டிச 09, 2024 07:50 AM

Google News

ADDED : டிச 09, 2024 07:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: உலக மண் தினத்தை முன்னிட்டு, 'மகிழ் முற்றம்' அமைப்பின் சார்பில் பள்ளி மாணவர்கள் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த மாதம் முதல் 'மகிழ் முற்றம்' எனும் மாணவர் அமைப்பு துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து மாணவர் குழுக்கள் அமைக்கப்பட்டு, மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், உலக மண் தினத்தை முன்னிட்டு, 'மகிழ் முற்றம்' மாணவர்கள் அமைப்பின் சார்பில், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமையில் நடந்தது.

நிகழ்ச்சியில், 'மண்ணையும், இயற்கையையும் பாதுகாப்பதில் மாணவர்களின் பங்கு' என்ற தலைப்பில் மாணவ, மாணவியர் பேசினர். மாணவர் அமைப்பின் தலைவர்கள் (ஆசிரியர்கள்) டெய்சிலீமா, கவுரி, சுப்புராஜ், வசந்த், தனபாக்கியம் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us