sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உண்டு உறைவிடப் பள்ளியில் பள்ளி மேலாண்மை கூட்டம்

/

உண்டு உறைவிடப் பள்ளியில் பள்ளி மேலாண்மை கூட்டம்

உண்டு உறைவிடப் பள்ளியில் பள்ளி மேலாண்மை கூட்டம்

உண்டு உறைவிடப் பள்ளியில் பள்ளி மேலாண்மை கூட்டம்


ADDED : செப் 14, 2025 10:46 PM

Google News

ADDED : செப் 14, 2025 10:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; பழங்குடியின மாணவர்கள் படிக்கும் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடந்தது.

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜாராம் தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர்(பொ) செந்தில்குமார் வரவேற்றார்.

பள்ளி மேலாண்மைக்குழு தலைவராக ராஜலட்சுமி, துணைத்தலைவராக சந்தியா, ஆசிரியர் பிரதிநிதியாக விஜயலட்சுமி, கல்வி ஆர்வலராக பிரியா மற்றும் பெற்றோர் பிரதிநிதிகளாக, 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி திட்ட மேற்பார்வையாளர் ராஜாராம் பேசியதாவது:

பழங்குடியின மாணவர்கள் படிக்கும் இந்தப்பள்ளியில், மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அரசின் சார்பில் செய்துதரப்பட்டுள்ளது. விடுமுறை நாளில் செட்டில்மென்ட் பகுதிக்கு வரும் குழந்தைகளை, குறிப்பிட்ட நாளில் மீண்டும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.

ஐந்து வயது நிரம்பிய குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் முன் வர வேண்டும். மாதம் தோறும் நடைபெறும் கூட்டத்திற்கு பெற்றோர்கள் தவறாமல் பங்கேற்று, குறைகளை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு, பேசினார்.






      Dinamalar
      Follow us