ADDED : செப் 16, 2025 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்துார்; தொண்டாமுத்துார் அரசு கலை அறிவியல் கல்லுாரி சார்பில், செஞ்சுருள் சங்கத்தின் அறிமுக விழா நேற்று கல்லுாரி அரங்கத்தில் நடந்தது.
கல்லுாரி முதல்வர் (பொ) செல்வம் தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த பரிசோதனை மற்றும் ஆலோசகர்கள் நித்யா மற்றும் மீனாட்சி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தனர். தொடர்ந்து, எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த போட்டி நடத்தப்பட்டது. செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் வேதா நன்றி கூறினார். பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.