/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செவ்வாழை, நேந்திரன் விலை சரிவால் அதிர்ச்சி
/
செவ்வாழை, நேந்திரன் விலை சரிவால் அதிர்ச்சி
ADDED : டிச 25, 2025 06:02 AM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து அதிகரித்த நிலையில், செவ்வாழை, நேந்திரன் விலை சரிவால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில் தென்னையில் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வாழைத்தார் அதிகம் வருகின்றன.
தினசரி காய்கறி மார்க்கெட்டில், நேற்று செவ்வாழை கிலோ - 65, நேந்திரன் --- 25, கதளி --- 40, பூவன் --- 30, ரஸ்தாளி --- 40 மற்றும் சாம்பிராணி வகை வாழைத்தார் --- 50 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த வாரத்தை காட்டிலும், தற்போது செவ்வாழை மற்றும் நேந்திரன் கிலோ --- 5, ரஸ்தாளி --- 10 மற்றும் பூவன் --- 7 ரூபாய் விலை குறைந்துள்ளது. இதே போன்று, கதளி கிலோவுக்கு, 5 ரூபாய் விலை அதிகரித்து இருந்து. செவ்வாழை, நேந்திரன் விலை சரிவால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த வாரத்தை காட்டிலும், வாழைத்தார் வரத்து அதிகமாக இருந்தது. நேற்று 200க்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் வரத்து இருந்தது. வெளி மாவட்டத்தில் இருந்து, வாழைத்தார் வரவு இல்லை. இதனால், ஒரு சில வாழைத்தார்கள் விலை குறைந்து காணப்பட்டது,' என்றனர்.

