sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பணி முடிந்து சென்ற எஸ்.ஐ.,விபத்தில் சிக்கி படுகாயம்

/

பணி முடிந்து சென்ற எஸ்.ஐ.,விபத்தில் சிக்கி படுகாயம்

பணி முடிந்து சென்ற எஸ்.ஐ.,விபத்தில் சிக்கி படுகாயம்

பணி முடிந்து சென்ற எஸ்.ஐ.,விபத்தில் சிக்கி படுகாயம்


ADDED : டிச 19, 2024 11:55 PM

Google News

ADDED : டிச 19, 2024 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் விபத்தில் சிக்கி எஸ்.ஐ., படுகாயம் அடைந்தார்.

கோவை மாநகர், வடவள்ளி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருபவர் தனசேகரன், 57. இவர் உப்பிலிபாளையத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

தினமும் பணி முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு செல்வது வழக்கம்.

இதேபோல், நேற்று முன்தினம் இரவு, 10:30 மணியளவில் பணி முடிந்து வடவள்ளி ஸ்டேஷனில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டார். அவர், ஆர்.எஸ் புரம், டி.பி., சாலைவழியாக சென்றார். அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று எஸ்.ஐ தனசேகரனின் இரு சக்கர வாகனத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் தனசேகரன் துாக்கி வீசப்பட்டார். கீழே விழுந்த அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவரை மீட்டு அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பலத்த காயமடைந்த எஸ்.ஐ., சாய்பாபாகாலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us