sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆடி காற்றுக்கு பட்டுக்கூடு உற்பத்தி சும்மா 'பறக்கும்'

/

ஆடி காற்றுக்கு பட்டுக்கூடு உற்பத்தி சும்மா 'பறக்கும்'

ஆடி காற்றுக்கு பட்டுக்கூடு உற்பத்தி சும்மா 'பறக்கும்'

ஆடி காற்றுக்கு பட்டுக்கூடு உற்பத்தி சும்மா 'பறக்கும்'


ADDED : ஜூலை 12, 2025 01:20 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 01:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ஆனி, ஆடி மாதங்களில் காற்று அதிகம் வீசுவதால், பட்டுக்கூடு உற்பத்தி அதிகரிக்கும் என, பட்டுக்கூடு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது. இங்கு கோவை, திருப்பூர், ஈரோடு, கோபி, உடுமலை, திண்டுக்கல் மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, விவசாயிகள் பட்டுக்கூடுகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

கோவை பட்டு அங்காடிக்கு மாதம், 25 டன் வரை பட்டுக்கூடு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நேற்று தரமான பட்டுக்கூடு ஒரு கிலோ, 549 ரூபாய்க்கும், அடுத்த தரம் 300 ரூபாய்க்கும் விற்பனையானது. பட்டு நுால் மார்க்கெட் நிலவரம் ஒரு கிலோ, 4028 ரூபாய் என்ற நிலையில் இருந்தது.

பட்டு விவசாயிகள் கூறுகையில், 'பொதுவாக ஆனி, ஆடி மாதங்களில் காற்று அதிகம் இருக்கும். இந்த காற்றுக்கு பட்டுக்கூடு உற்பதி அதிகரிக்கும்.

'இடையில் மழையும், வெயிலும் இல்லாமல் இருக்க வேண்டும். இன்னும் சில மாதங்களில் பண்டிகை வர இருப்பதால், பட்டு நுாலுக்கான தேவையும் அதிகரிக்கும். விலையும் கூடும்' என்றனர்.






      Dinamalar
      Follow us