sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறுமுகை வார சந்தை 'ரெடி': ரூ.3.2 கோடியில் கூரைகள்

/

சிறுமுகை வார சந்தை 'ரெடி': ரூ.3.2 கோடியில் கூரைகள்

சிறுமுகை வார சந்தை 'ரெடி': ரூ.3.2 கோடியில் கூரைகள்

சிறுமுகை வார சந்தை 'ரெடி': ரூ.3.2 கோடியில் கூரைகள்


ADDED : மே 13, 2025 10:12 PM

Google News

ADDED : மே 13, 2025 10:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:

சிறுமுகை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. பேரூராட்சி அலுவலகம் அருகே, வாரச்சந்தை உள்ளது. ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை வாரச்சந்தை செயல்படும். சிறுமுகையை சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர், புளியம்பட்டி, ஆகிய ஊர்களில் இருந்து, வியாபாரிகள் சந்தைக்கு வருவது வழக்கம்.

சந்தையில் பொருட்கள் வைத்து விற்பனை செய்யும் போது, மழை பெய்தால் பொருட்கள் சேதம் அடைந்து வந்தன. அதனால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், 3.2 கோடி செலவில், எட்டு இடங்களில் மேல் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், தலைவர் மாலதி ஆகியோர் கூறியதாவது: வார சந்தைக்கு பொருட்களை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நலன் கருதி, விற்பனை செய்யப்படும் பொருட்கள் மழையில் சேதம் அடையாமல் இருக்க, எட்டு இடங்களில் மேல் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கூரைகளில், 256 கடைகள் வைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இரவில் பொருட்களை வைத்து விற்பனை செய்ய, மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளன. விரைவில் வார சந்தை மேல் கூரை கடைகள் திறக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us