sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறிய வேகத்தடையால் பயனில்லை : வாகன ஓட்டுநர்கள் புலம்பல்

/

சிறிய வேகத்தடையால் பயனில்லை : வாகன ஓட்டுநர்கள் புலம்பல்

சிறிய வேகத்தடையால் பயனில்லை : வாகன ஓட்டுநர்கள் புலம்பல்

சிறிய வேகத்தடையால் பயனில்லை : வாகன ஓட்டுநர்கள் புலம்பல்


ADDED : டிச 03, 2024 09:01 PM

Google News

ADDED : டிச 03, 2024 09:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி சுற்றுப்பகுதி நெடுஞ்சாலைகளில், சிறிய அளவிலான வேகத்தடை அமைத்தும் வாகனங்களின் வேகம் குறைக்கப்படுவதில்லை, என, புகார் எழுந்துள்ளது.

பொள்ளாச்சி நகரில் இருந்து, கோவை, உடுமலை, பல்லடம், தாராபுரம், கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூருக்கு செல்லும் வழித்தடங்களில், வாகனங்களின் இயக்கம் அதிகரித்தும் வருகிறது.

இதனால், விபத்து நிகழும் பகுதிகள் கண்டறியப்பட்டு, வாகன ஓட்டுநர்களை எச்சரிக்கும் வகையில் சிறிய அளவிலான வேகத்தடை (ரம்புள் ஸ்பீட் பிரேக்கர்), ரோட்டில் ஒளியை பிரதிபலிக்கும் 'ஸ்டட்' (கேட் ஐ), நான்கு வரிசையில், ஒளி பிரதிபளிப்பான் பொருத்தப்பட்டு வருகிறது.

மேலும், 'மெதுவாக செல்லவும்' என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்படுகிறது. குறிப்பாக, மருத்துவமனை, பள்ளி, சாலை சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில், இத்தகைய கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆனால், ஒவ்வொரு வழித்தடத்திலும், வழக்கமாக செல்லும் சில ஓட்டுநர்கள் மட்டுமே, விதிகளைப் பின்பற்றி, வேகத்தை குறைந்து, வாகனங்களை இயக்குகின்றனர். பெரும்பாலானவர்கள் எப்போதும் போல வேகமாக வாகனத்தை ஓட்டிச் செல்கின்றனர். இதனால், சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:

விபத்தை தவிர்க்கும் நோக்கில், வேகத்தை குறைத்து வாகனங்களை இயக்கவே, சிறிய அளவிலான வேகத்தடை அமைக்கப்படுகிறது. அதன்படி, வேகத்தை குறைத்து, சிறிய அளவிலான வேகத்தடையை கடக்க முற்படும் போது, பின்னால் வேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.

எனவே, வேகத்தடையை கடக்கும் போது, வாகனங்கள் குறிப்பிட்ட கி.மீ., வேகத்தில் செல்ல வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் ஆங்காங்கே விழிப்புணர்வு பேனர்கள் வைக்க வேண்டும். இல்லையெனில் சிறிய அளவிலான வேகத்தடை அமைக்கப்பட்டும், அதற்கான பயன் இல்லாமல் உள்ளது.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us