/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பேபாளையம், வெள்ளமடை ஊராட்சிகளில் சமூகத் தணிக்கை
/
குப்பேபாளையம், வெள்ளமடை ஊராட்சிகளில் சமூகத் தணிக்கை
குப்பேபாளையம், வெள்ளமடை ஊராட்சிகளில் சமூகத் தணிக்கை
குப்பேபாளையம், வெள்ளமடை ஊராட்சிகளில் சமூகத் தணிக்கை
ADDED : டிச 03, 2024 06:34 AM
அன்னுார்,; குப்பேபாளையம் மற்றும் வெள்ளமடை ஊராட்சிகளில் சமூக தணிக்கை நேற்று துவங்கியது.
கடந்த ஆண்டு, ஏப். 1 முதல், நடப்பு ஆண்டு மார்ச் 31 வரை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், செய்யப்பட்ட பணிகள் மற்றும் 2016 முதல் 2022 வரை, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் குறித்த, சமூக தணிக்கை ஊராட்சிகளில் நடக்கிறது. அன்னுார் ஒன்றியத்தில், குப்பே பாளையம் ஊராட்சியில், நேற்று விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. வட்டார வள அலுவலர் கனக ராஜ், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பணித்திட்ட பொறுப்பாளர்களுக்கு தணிக்கை குறித்து விளக்கம் அளித்தார்.
வருகிற 5ம் தேதி வரை சமூகத் தணிக்கை நடைபெறும். வரும் 6ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும், என தெரிவித்தார். சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில், வெள்ளமடை ஊராட்சியில், வட்டார வள அலுவலர் சந்திரசேகரன் தலைமையில், விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. சூலூர் ஒன்றியத்தில் நீலம்பூர் ஊராட்சி உள்பட 10 ஊராட்சிகளில், வரும் 6ம் தேதி காலை 11:00 மணிக்கு சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது.