sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பத்து ஊராட்சிகளில் சமூகத் தணிக்கை 4ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம்; 4ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம்

/

பத்து ஊராட்சிகளில் சமூகத் தணிக்கை 4ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம்; 4ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம்

பத்து ஊராட்சிகளில் சமூகத் தணிக்கை 4ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம்; 4ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம்

பத்து ஊராட்சிகளில் சமூகத் தணிக்கை 4ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம்; 4ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம்


ADDED : ஜன 01, 2025 07:32 AM

Google News

ADDED : ஜன 01, 2025 07:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார் : கோவை மாவட்டத்தில், பச்சாபாளையம் உள்பட 10 ஊராட்சிகளில், சமூக தணிக்கை நடந்தது. வருகிற 4ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது.

கடந்த ஆண்டு, ஏப். 1 முதல், நடப்பு ஆண்டு மார்ச் 31 வரை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், செய்யப்பட்ட பணிகள் மற்றும் 2016 முதல் 2021ம் ஆண்டு வரை, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் குறித்த, சமூக தணிக்கை, கோவை மாவட்டத்தில் நடக்கிறது.

நடப்பு வாரத்தில், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில், பிளிச்சி ஊராட்சி, அன்னுார் ஒன்றியத்தில், பச்சாபாளையம், காரமடை ஒன்றியத்தில் தேக்கம்பட்டி, சூலூர் ஒன்றியத்தில், ராசிபாளையம், சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் செஞ்சேரி புதுார் உள்பட 10 ஊராட்சிகளில், நேற்றுமுன்தினம் ஊராட்சித் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. நேற்று சமூக தணிக்கை துவங்கியது. தணிக்கையாளர்கள்,வேலை அட்டை, வருகை பதிவேடுகள் மற்றும் களத்தில் செய்யப்பட்ட பணிகளை ஆய்வு செய்தனர்.

வருகிற 4ம் தேதி காலை 11:00 மணிக்கு, பத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது. இதில் சமூக தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.

இதில் பங்கேற்க, பொது மக்களுக்கு, ஊரக வளர்ச்சித் துறை அழைப்பு விடுத்துள்ளது.






      Dinamalar
      Follow us