ADDED : மே 21, 2026 09:17 AM

அ நிறம் | அளவு
கோவை: தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவின் படி, கோவைக்கு புதிய எஸ்.பி.,நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்ட எஸ்.பி., பொறுப்பில் பணியாற்றிய கார்த்திகேயன், தாம்பரம் துணை கமிஷனராக (சட்டம்-ஒழுங்கு) மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு மாற்றாக, தாம்பரம் துணை கமிஷனர் பொறுப்பில் இருந்த அல்லடிபள்ளி பவன் குமார், கோவை மாவட்ட புதிய எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பணிமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் உடனடியாக, புதிய பொறுப்பை ஏற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
