/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒட்டர்பாளையத்தில் 17ல் சிறப்பு முகாம்
/
ஒட்டர்பாளையத்தில் 17ல் சிறப்பு முகாம்
ADDED : செப் 14, 2025 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; ஒட்டர்பாளையம் ஊராட்சி மக்களுக்கான, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் வரும் 17ம் தேதி காலை 10:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை, மேகிணறு பிரிவில் உள்ள கிராண்ட் பேலஸ் மண்டபத்தில் நடக்கிறது.
இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகை, புதிய ரேஷன் கார்டு, நில அளவை, பட்டா மாறுதல் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த கோரிக்கைகளுக்கு மனு அளிக்கலாம்.
ஊரக வளர்ச்சி துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட 17 துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு வருவாய்த்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.