ADDED : அக் 16, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் நாள் மருத்துவ முகாம், நேற்று பேரூர் ஒன்றிய அலுவலகத்தில், காலை 9:30 மணிக்கு துவங்கியது.
புதியதாக, தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, 21 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.- 39 பேருக்கு அடையாள அட்டை புதுப்பிக்கப்பட்டது. அறுவைசிகிச்சை மேற்கொள்வதற்கு, நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டனர். இம்முகாமில் 117 மாணவர்கள் பங்கேற்றனர்.