sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு கலைக் கல்லுாரியில் விளையாட்டு விழா இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 'சாம்பியன்ஷிப்'

/

அரசு கலைக் கல்லுாரியில் விளையாட்டு விழா இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 'சாம்பியன்ஷிப்'

அரசு கலைக் கல்லுாரியில் விளையாட்டு விழா இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 'சாம்பியன்ஷிப்'

அரசு கலைக் கல்லுாரியில் விளையாட்டு விழா இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 'சாம்பியன்ஷிப்'


ADDED : பிப் 10, 2025 07:03 AM

Google News

ADDED : பிப் 10, 2025 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை அரசு கலைக் கல்லுாரியில் நடந்த விளையாட்டு விழாவில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்றனர்.

கோவை அரசு கலைக் கல்லுாரியில் விளையாட்டு விழா நடந்தது. கால்பந்து, கையுந்து பந்து, கபடி, கிரிக்கெட், இறகுப்பந்து, செஸ், 100 மீ., 200 மீ., 400 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் என, மாணவ, மாணவியருக்கு, 17 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டியானது, முதலாமாண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு, முதுகலை மாணவர்கள் என, நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் அதிக புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றனர்.

தடகள போட்டியில், இளங்கலை அரசியல் அறிவியல் துறை முதலாமாண்டு மாணவர் ஆறுமுகம், மாணவியர் பிரிவில், முதுகலை வரலாறு துறை முதலாமாண்டு மாணவி ஜெயந்தி ஆகியோர் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு, கல்லுாரி முதல்வர் எழிலி பரிசுகள் வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us