/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் 58ம் ஆண்டு திருவிழா
/
ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் 58ம் ஆண்டு திருவிழா
ADDED : ஆக 06, 2025 10:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; ஆர்.எஸ்.புரம் ஸ்ரீ சக்திமாரியம்மன் கோவிலின் 58ம் ஆண்டு ஆடித்திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
கடந்த ஜூலை 21ம் தேதி, மஹாகணபதி ஹோமத்துடன் ஆடித்திருவிழா துவங்கியது. 22 அன்று பூச்சாட்டு, ஆக.,4ல் அக்னிகம்பம் நடுதலும், 5ம் தேதி இரவு 7:00 மணிக்கு கோனியம்மன் கோவிலிலிருந்து சக்தி கரகத்துடன் அம்மன் ஊர்வலமாக அழைத்து வரும் நிகழ்வும் நடந்தது.
நேற்று இரவு 7:00 மணிக்கு தையம், முருகன்காவடி மற்றும் சிறப்பு மேள தாளத்துடன் பூவோடு, மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் தரிசித்தனர்.