sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநில வேளாண் கண்காட்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

/

மாநில வேளாண் கண்காட்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

மாநில வேளாண் கண்காட்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

மாநில வேளாண் கண்காட்சி; விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : ஜூன் 05, 2025 01:04 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்; பெருந்துறை அருகே நடக்கும் மாநில அளவிலான வேளாண் கண்காட்சியில் பங்கேற்று பயன் அடைய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில், பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சாலையில், மாநில அளவிலான வேளாண் கண்காட்சி வரும், 11 மற்றும், 12 ம்தேதி நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் கண்காட்சியை துவக்கி வைக்க உள்ளார்.

கண்காட்சியில் விவசாயிகள் பங்கேற்கும் வகையில் பிரசாரங்களில் வேளாண்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு வட்டாரத்தில் இருந்தும் விவசாயிகளை பஸ்களில் அழைத்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தங்குமிடம், உணவு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் கூறினர்.

கண்காட்சியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், ஏற்றுமதி சார்ந்த பொருட்கள், பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானிய பொருட்கள், காட்சிப்படுத்தப்பட உள்ளன.

மேலும், வேளாண் இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் விதைகள், செடிகள், இடுபொருட்கள் கண்காட்சியில் இடம் பெற உள்ளதாகவும், அதனால் விவசாயிகள் கண்காட்சியில் பங்கேற்று பயன் அடைய அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us