sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விரட்டும் தெருநாய்கள்; மடியும் ஆடுகள்

/

விரட்டும் தெருநாய்கள்; மடியும் ஆடுகள்

விரட்டும் தெருநாய்கள்; மடியும் ஆடுகள்

விரட்டும் தெருநாய்கள்; மடியும் ஆடுகள்


ADDED : ஏப் 28, 2025 11:02 PM

Google News

ADDED : ஏப் 28, 2025 11:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடிமங்கலம், ; கோட்டமங்கலம் ஊராட்சியில் தெருநாய்கள், கால்நடைகளை தொடர்ந்து தாக்குவதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

குடிமங்கலம் ஒன்றியம், கோட்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட வரதராஜபுரம், வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், குமாரபாளையம், முருங்கப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், கால்நடை வளர்ப்பு பிரதானமாக உள்ளது.

சமீபகாலமாக, விளைநிலங்கள் மற்றும் வீடுகளில் பராமரிக்கப்படும் கால்நடைகளை தெருநாய்கள் தாக்குவது அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் வரதராஜபுரம் கிராமத்தில், தெருநாய்கள் கடித்ததில், தாயம்மாள் என்பவருக்கு சொந்தமான 6 ஆடுகள் உயிரிழந்தன. இச்சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கிராம மக்கள் கூறியதாவது: கோட்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் இறைச்சிக்கழிவுளை திறந்தவெளியில் வீசுகின்றனர். அக்கழிவுகளை உண்ணும் தெருநாய்கள், பிற நாட்களில், கால்நடைகளையும், மனிதர்களையும் தாக்குகின்றன.

இதை கட்டுப்படுத்த, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகத்தின் வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us