ADDED : பிப் 11, 2026 05:05 AM
கோவை: மத்திய தொழிற்சங்கங்களின் பொது வேலை நிறுத்தம் நாளை (12ம் தேதி) நடப்பதை முன்னிட்டு தெருமுனை பிரசார கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது.
இன்சூரன்சு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் துளசிதரன் பேசியதாவது:
தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்ட தொகுப்புகளை அமல் படுத்தக்கூடாது, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுக்க கூடாது, விவசாய விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை தர வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதா, அணுசக்தி சட்டத்திருத்த மசோதா, இன்சூரன்சுதுறையில், 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டு உயர்வு சட்டம் ஆகியவற்றை திரும்பப்பெற வேண்டும். இதை வலியுறுத்தி நாளை நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார். சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் கண்ணன், மாநில செயலாளர் ஆறுமுக நயினார், ஓய்வூதியர் சங்க தலைவர் மதன் பேசினர். எல்.ஐ.சி., அரசு காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள், தமிழ்நாடு அரசு ஊழியர்கள், பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட அமைப்புகளின் ஊழியர்கள் பங்கேற்றனர்.

