/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி-வினா போட்டி அரையிறுதிக்கு முன்னேறிய மாணவர்கள்
/
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி-வினா போட்டி அரையிறுதிக்கு முன்னேறிய மாணவர்கள்
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி-வினா போட்டி அரையிறுதிக்கு முன்னேறிய மாணவர்கள்
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி-வினா போட்டி அரையிறுதிக்கு முன்னேறிய மாணவர்கள்
ADDED : நவ 23, 2024 11:30 PM

கோவை: 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில், 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி-வினா போட்டி, நேற்று, கருமத்தம்பட்டி, கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
இதில் வெற்றி பெற்ற மாணவர்கள், அரையிறுதி போட்டிக்கு முன்னேறினர்.
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில்,மாணவர்களிடம் வாசிப்புத்திறனை ஊக்குவித்து, கற்றலில் தேடலை விரிவுப்படுத்தும் வகையில், 2018ம் ஆண்டு முதல் 'வினாடி-வினா' போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான 'வினாடி-வினா விருது, 2024-25' போட்டி, 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் நடத்தப்படுகிறது. எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனம் கரம் கோர்த்துள்ளது. 'கோ-ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சிஸ் உள்ளது.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இப்போட்டி நடத்தப்பட்டுவருகிறது. பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு, அரையிறுதி போட்டி நடத்தப்படும். இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப்போட்டி நடத்தப்படும். இறுதி போட்டியில் இடம்பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன.
நேற்று கருமத்தம்பட்டி, கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த வினாடி-வினா நிகழ்ச்சியில், 155 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர்.இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது.
மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 'ஜி' அணியை சேர்ந்த, 8ம் வகுப்பு மாணவர் மைத்ரேயன், 9ம் வகுப்பு மாணவர் ஹோமேஷ் ஸ்ரீகாந்த் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் வசந்தி பால்ராஜ் பரிசு வழங்கினார்.கல்வி ஒருங்கிணைப்பாளர்களான, கலாமணி, உமாபதி மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீபிரியா, கிரேசி ஆகியோர் உடனிருந்தனர்.