/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி- வினா போட்டி கில்லி போல் பதிலளித்து அசத்திய மாணவர்கள்
/
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி- வினா போட்டி கில்லி போல் பதிலளித்து அசத்திய மாணவர்கள்
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி- வினா போட்டி கில்லி போல் பதிலளித்து அசத்திய மாணவர்கள்
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி- வினா போட்டி கில்லி போல் பதிலளித்து அசத்திய மாணவர்கள்
ADDED : டிச 21, 2024 11:16 PM

கோவை: 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நடந்த 'பதில் சொல்; பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில் மாணவ, மாணவியர் அசத்தலான பதிலளித்தனர்.
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில் மாணவர்களிடம் கற்றல் சார்ந்த தேடலை விரிவுபடுத்தவும், தேர்வுக்கு உற்சாகப்படுத்தும் விதமாகவும் கடந்த, 2018ம் ஆண்டு முதல் 'வினாடி-வினா' போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டுக்கான 'வினாடி வினா விருது, 2024-25' போட்டி, 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் அக்., 8ம் தேதி துவங்கியது. இவர்களுடன் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது.
'கோ-ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சிஸ் உள்ளது. 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு, அரையிறுதி போட்டி நடக்கும். இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப்போட்டி நடத்தப்படும்.
* ஒண்டிப்புதுார் அருகே சமஸ்காரா அகாடமியில் நடந்த வினாடி-வினா போட்டியில், 28 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர். அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில், 'எப்' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர் தேஜஸ் ஸ்ரீவத்சா, ஏழாம் வகுப்பு மாணவர் விஷ்ணு நரசிம்மன் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி முதல்வர் லிவ்லின் சேவியர், துணை முதல்வர் உமா ஆகியோர் பரிசுகள் வழங்கினர். ஒருங்கிணைப்பாளர்கள் ஆயிஷா, தேவகி, நிர்மலா ஆகியோர் உடனிருந்தனர்.
* கோயம்புத்துார் பப்ளிக் பள்ளியில் நடந்த போட்டியில், 20 பேர் தகுதிச்சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர். போட்டியின் நிறைவில், 'ஏ' அணியை சேர்ந்த, எட்டாம் வகுப்பு மாணவி ரூபிகா, ஐந்தாம் வகுப்பு மாணவர் ஹர்ஸ் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி தாளாளர் நிர்மலா பரிசுகள் வழங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் சந்தோஷ்குமார், சிவரஞ்சனி ஆகியோர் உடனிருந்தனர்.