/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐடியாத்தானில் மாணவர்கள் அசத்தல்
/
ஐடியாத்தானில் மாணவர்கள் அசத்தல்
ADDED : மார் 01, 2026 06:48 AM

கோவை: டாக்டர் எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தேசிய அளவிலான 'ஐடியாத்தான் 2026' போட்டி நடந்தது.
சிறப்பு விருந்தினர் போஷ் குளோபல் சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் நவீத் நாராயணன் பேசுகையில், '' மாணவர்கள் புதுமை சிந்தனை, தொழில்துறை நோக்கமுள்ள தீர்வுகள் மற்றும் தொடர்ச்சியான கற்றல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினால், மாறிவரும் தொழில்நுட்ப உலகில் வெற்றி பெற முடியும், '' என்றார்.
போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலிருந்து 200 அணிகள் பங்கேற்றன.
இறுதி போட்டியில், செங்குந்தார் பொறியியல் கல்லுாரி மற்றும் பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்றன.
கல்லுாரியின் தலைவர் டாக்டர் ராஜலட்சுமி, சி.இ.ஓ., டேனியல், தொழில்நுட்ப இயக்குநர் நளின் விமல் குமார், துணை முதல்வர் நரேஷ் குமார், முதல்வர் அனிதா ஆகியோர் கலந்துகொண்டனர்.

