sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'தினமலர் - பட்டம்' இதழ் சார்பில் வினாடி - வினா சாந்தி பள்ளி மாணவர்கள் அசத்தல்

/

'தினமலர் - பட்டம்' இதழ் சார்பில் வினாடி - வினா சாந்தி பள்ளி மாணவர்கள் அசத்தல்

'தினமலர் - பட்டம்' இதழ் சார்பில் வினாடி - வினா சாந்தி பள்ளி மாணவர்கள் அசத்தல்

'தினமலர் - பட்டம்' இதழ் சார்பில் வினாடி - வினா சாந்தி பள்ளி மாணவர்கள் அசத்தல்


ADDED : நவ 09, 2025 11:04 PM

Google News

ADDED : நவ 09, 2025 11:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் சார்பில், 'பதில் சொல்; பரிசை வெல்' மெகா வினாடி --- வினா போட்டி, பொள்ளாச்சி அருகே ஜோதிநகர் சாந்தி பள்ளியில் பள்ளியில் நடந்தது.

மாணவர்களின் கற்றல் ஆர்வம் மற்றும் நுண்ணறிவுத்திறனை ஊக்குவித்து, படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவுப்படுத்துவதற்காக, 'தினமலர்' நாளிதழ் 'பட்டம்' இதழ் சார்பில், மெகா வினாடி -- -வினா போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.

நடப்பாண்டு போட்டியானது, 'தினமலர்' நாளிதழின், 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் வினாடி--வினா போட்டிக்கு, 'சத்யா ஏஜென்சிஸ்' மற்றும் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்' நிறுவனங்கள், 'கிப்ட் ஸ்பான்சர்'களாக இணைந்துள்ளன.

இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர். பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் அணியினர், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அவர்களில் இருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப் போட்டியில் பங்கேற்பர்.

அவ்வகையில், பொள்ளாச்சி அருகே ஜோதிநகர் சாந்தி பள்ளியில், வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. தகுதிச்சுற்றில், 120 மாணவர்கள் பங்கேற்றனர்.

அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ, மாணவியர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பள்ளி அளவில் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர்.

மூன்று சுற்றுகளாக நடந்த விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், 'இ' அணி முதல் பரிசை வென்றது. அந்த அணியில் இடம் பெற்ற 8ம் வகுப்பு மாணவர்கள் தரண், முகமதுஹிஷாம் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

இறுதி போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி, ஒருங்கிணைப்பாளர் ரேவதி, தமிழ் ஆசிரியர்கள் பொற்கொடி, தேவிஸ்ரீஆண்டாள், ராஜலட்சுமி உள்ளிட்டோர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.

மாணவர்கள் ஊக்குவிப்பு முதல்வர் ஜெய லட்சுமி கூறுகையில், 'ஒவ்வொரு ஆண்டும் தினமலர் 'பட்டம்' இதழ் நடத்தும் வினாடி - வினா வாயிலாக மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இந்த போட்டியின் வாயிலாக மாணவர்கள் தங்களது பொது அறிவை வளர்த்து கொள்கின்றனர். பள்ளி மாணவர்கள், வினாடி-வினா போட்டியில் கலந்து கொள்ள ஆர்வம் கொள்கின்றனர். 'தினமலர்' நாளிதழின் இந்த முயற்சி, பாராட்டுக்குரியதாக உள்ளது.

ஆர்வத்தை துாண்டுகிறது

மாணவர் தரண்: தினமலர் 'பட்டம்' இதழ் வினாடி-வினா போட்டி, ஒரு புதிய அனுபவத்தை தந்தது. தொடர்ந்து, பட்டம் இதழ் படித்தது மட்டுமின்றி தினமலர் செய்தித்தாளையும் படித்து வந்ததால், போட்டியில் வெற்றி பெற முடிந்தது. தொடர்ந்து, நல்லமுறையில் படித்து, இறுதிச் சுற்று போட்டியிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. முகமதுஹிஷாம்: தினமலர் பட்டம் இதழ் நடத்தும் வினாடி -வினா போட்டியில் முதன் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இது எனக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது. தொடர்ந்து, செய்தித்தாள் படிக்கும் ஆர்வத்தை துாண்டுகிறது. பட்டம் இதழ், கணிதம், அறிவியல் என, பொது அறிவு பெட்டகமாக உள்ளது.








      Dinamalar
      Follow us