/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்-பட்டம்' மெகா வினாடி-வினா போட்டி தயங்காமல் பதிலளித்த மாணவ, மாணவியர்
/
'தினமலர்-பட்டம்' மெகா வினாடி-வினா போட்டி தயங்காமல் பதிலளித்த மாணவ, மாணவியர்
'தினமலர்-பட்டம்' மெகா வினாடி-வினா போட்டி தயங்காமல் பதிலளித்த மாணவ, மாணவியர்
'தினமலர்-பட்டம்' மெகா வினாடி-வினா போட்டி தயங்காமல் பதிலளித்த மாணவ, மாணவியர்
ADDED : டிச 08, 2024 03:12 AM

கோவை: 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நடந்த, 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி-வினா போட்டியில், மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பதிலளித்து அசத்தினர்.
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில் மாணவர்களிடம் கற்றல் சார்ந்த தேடலை விரிவுபடுத்தவும், தேர்வுக்கு உற்சாகப்படுத்தும் விதமாகவும் கடந்த, 2018ம் ஆண்டு முதல் 'வினாடி-வினா' போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டுக்கான 'வினாடி வினா விருது, 2024-25' போட்டி, 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் அக்., 8ம் தேதி துவங்கியது. இவர்களுடன் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது.
'கோ-ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சிஸ் உள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில், பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு, அரையிறுதி போட்டி நடக்கும்.
இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப்போட்டி நடத்தப்படும். இறுதி போட்டியில் இடம்பெறும் மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
* சிங்காநல்லுார், வெங்கடலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த வினாடி-வினா போட்டியில், 437 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர்.
அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில், 'டி' அணியை சேர்ந்த, 9ம் வகுப்பு மாணவர் ராஷித் அகமது, மாணவி கேஷினி ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
* வெங்கடலட்சுமி மெட்ரிக் பிரைமரி பிளாக்கில் நடந்த போட்டியில், 361 பேர் தகுதிச்சுற்றுக்கான தேர்வு எழுதினர். போட்டிகளின் நிறைவில் 'ஏ' அணியை சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவி பிரியங்கா, மாணவர் அதிஸ் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
இரு பள்ளிகளிலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளி முதல்வர் கீதா, தலைமையாசிரியர் ஸ்ரீவித்யா ஆகியோர் பரிசுகள் வழங்கினர். போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கீதா, பரிமளா தேவி, ஆசிரியை ராதிகா ஆகியோர் உடனிருந்தனர்.
* செட்டிபாளையம், அவதார் பப்ளிக் பள்ளியில் நடந்த போட்டியில், 66 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர். போட்டியின் நிறைவில், 'சி' அணியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவியர் அனிஷா, ஸ்ரீஹர்ஷினி ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தாளாளர் செந்தில்குமார், முதல்வர் ரம்யா ஆகியோர் பரிசுகள் வழங்கினர். ஒருங்கிணைப்பாளர் அன்புசெல்வி, ஆசிரியர்கள் முத்துமலர், கீதா ஆகியோர் உடனிருந்தனர்.