sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'பட்... பட்' என பதிலளித்து பரிசை வென்ற மாணவர்கள்! 'தினமலர் - பட்டம்' நடத்திய வினாடி - வினா போட்டியில் அசத்தல்

/

'பட்... பட்' என பதிலளித்து பரிசை வென்ற மாணவர்கள்! 'தினமலர் - பட்டம்' நடத்திய வினாடி - வினா போட்டியில் அசத்தல்

'பட்... பட்' என பதிலளித்து பரிசை வென்ற மாணவர்கள்! 'தினமலர் - பட்டம்' நடத்திய வினாடி - வினா போட்டியில் அசத்தல்

'பட்... பட்' என பதிலளித்து பரிசை வென்ற மாணவர்கள்! 'தினமலர் - பட்டம்' நடத்திய வினாடி - வினா போட்டியில் அசத்தல்


ADDED : அக் 21, 2024 11:27 PM

Google News

ADDED : அக் 21, 2024 11:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான, 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி - வினா போட்டி பொள்ளாச்சி விஸ்வதீப்தி மெட்ரிக் பள்ளியில் நடந்தது.

பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வுத்திறன், கணிதம், மொழித்திறனை ஊக்குவிக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை, 'பட்டம்' இதழ் தினமும் பள்ளிகளில் கிடைக்கும்.

இதை வாசிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தவும், அவர்களின் கற்றல் சார்ந்த தேடலை விரிவுப்படுத்தும் வகையிலும், 2018 முதல், மெகா வினாடி - வினா போட்டி நடத்தப்படுகிறது.

நடப்பாண்டுக்கான வினாடி - வினா போட்டி, 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலாம்பட்டி விஸ்வதீப்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது. 'கோ - ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சி இணைந்து உள்ளது.

பள்ளியில், நேற்று நடந்த போட்டியில், 100 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக புள்ளிகள் பெற்ற, 16 பேரை, எட்டு அணிகளாக பிரித்து இறுதிச்சுற்று போட்டி நடந்தது.மூன்று கட்டங்களாக நடந்த இப்போட்டியில், முதல் பரிசை, 'சி' அணியை சேர்ந்த, 6ம் வகுப்பு மாணவர்கள் நிரல்யா, முகமது ஷாயிக் ஆகியோர் வென்றனர்.

போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியரை பள்ளி முதல்வர் ஜாய் மற்றும் ஒருங்கிணைப்பாளர் உமாசங்கரி, ஆசிரியர்கள் பாராட்டி, சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினர். கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், அரையிறுதியில் பங்கேற்பர். இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதி போட்டி நடத்தப்படும்.

போட்டியில் வெல்வதே இலக்கு!

முகமது ஷாயிக்: 'தினமலர் - பட்டம்' இதழ், பொது அறிவை வளர்த்துக்கொள்ள உதவியாக உள்ளது. இதில், வரும் தகவல்கள் ஒவ்வொன்றும் ஆர்வமாக படிக்க துாண்டுகிறது. எளிதாகவும், புரிந்து கொள்ளும் வகையில் உள்ளதால், 'பட்டம்' இதழை அனைவரும் விரும்பி படிக்கிறோம்.வினாடி - வினா இறுதி போட்டியில் வெல்வதை இலக்காக கொண்டு முயற்சி மேற்கொள்வேன்.








      Dinamalar
      Follow us