/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அபாரமான திறமை வெளிப்படுத்திய மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி
/
அபாரமான திறமை வெளிப்படுத்திய மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி
அபாரமான திறமை வெளிப்படுத்திய மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி
அபாரமான திறமை வெளிப்படுத்திய மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி
ADDED : நவ 16, 2025 12:50 AM

கோவை: 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ்., கல்விக் குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில், ஜி.ஆர்.ஜி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் பி.ஆர்., சித்தா நாயுடு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று, அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
தமிழ், ஆங்கிலம் மட்டுமன்றி அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் மாணவர்களின் பகுத்தறிவு, சிந்தனையாற்றல் மற்றும் பொது அறிவுத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது.
படிப்பின் மீது ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், தினமலர் சார்பில் இத்தகைய வினாடி-வினா போட்டிகள் மாணாவர்களுக்காகதொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
பள்ளி அளவிலான சுற்றில் வெற்றி பெறும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறுகின்றன. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு, சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.
ஜி.ஆர்.ஜி., மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி: ஹோப்காலேஜில்உள்ள இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில், 102 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ-மாணவிகள் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 'ஏ' அணி முதலிடம் பெற்றது.
அந்த அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் அஸ்வதி மற்றும் முகுந்த் கிருஷ்ணா ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளி முதல்வர் சரவண குமார், இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
சி.எம்.எஸ்., மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி: கணபதியில் உள்ள இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில் 63 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ-மாணவிகள் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில், 'எப்' அணி முதலிடம் பெற்றது.
அந்த அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் அனில் குமார் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவன் பிரணவ் ஆகியோர், அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளி முதல்வர் ஸ்ரீ பிரியா, இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
பி.ஆர்.சித்தா நாயுடு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி: சித்தாபுதூரில் உள்ள இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில், 180 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ-மாணவிகள் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 'எச்' அணி முதலிடம் பெற்றது.
அந்த அணியை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி டாவினா மற்றும் ஏழாம் வகுப்பு மாணவன் பெனியேல் ஆசீர் ஆகியோர், அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளி தாளாளர் சாந்தா தியாகராஜன் மற்றும் முதல்வர் காஞ்சனா மாலா, இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

