/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்க்கரை வள்ளிக்கிழங்கு பராத்தா
/
சர்க்கரை வள்ளிக்கிழங்கு பராத்தா
ADDED : டிச 21, 2025 05:37 AM

தேவையான பொருட்கள்:: n கோதுமை மாவு - இரண்டு கப் n சர்க்கரைவள்ளிக் கிழங்கு - மூன்று n மிளகாய்த் துாள் - இரண்டு டீஸ்பூன் n உப்பு, எண்ணெய் - தேவையான அளவு n கொத்தமல்லித்தழை- கைப்பிடி அளவு செய்முறை:: சுவையான மற்றும் ஆரோக்கியமான சர்க்கரைவள்ளிக் கிழங்கு பராத்தா எப்படி செய்வது என்பதை இங்கே காணலாம்.
கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்து மசித்து வைக்கவும்.
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும், மிளகாய்த் தூள் சேர்த்து, உதிர்த்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு, உப்பு மற்றும் தனியா அனைத்தையும் போட்டு நன்றாகக் கிளறி இறக்கி ஆறவிடவும்.
பிறகு, பிசைந்து வைத்துள்ள மாவை சப்பாத்திகளாக தட்டி, இரண்டின் நடுவில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு கலவையை வைத்து தேய்த்து கனமான சப்பாத்திகளாக தயார் செய்யவும். இதை சப்பாத்திக் கல்லில் போட்டு எண்ணெய் விட்டு சுட்டெடுக்க, சர்க்கரை வள்ளிக் கிழங்கு பராத்தா ரெடி. இதன் மேல் வெண்ணெய் வைத்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

