/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளிக்கு தளவாட பொருட்கள் வழங்கல்
/
அரசு பள்ளிக்கு தளவாட பொருட்கள் வழங்கல்
ADDED : நவ 28, 2025 04:52 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, சமத்துாரில் வாணவராயர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லுாரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் சங்கர் வாணவராயர் ஆகியோர் பரிந்துரையின் பேரில், இப்பள்ளிக்கு தளவாட பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதற்கான நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. என்.ஜி.எம்., கல்லுாரி முதல்வர் மாணிக்கச்செழியன், நிர்வாக மேலாளர் ரகுநாதன், முதன்மையர் முத்துக்குமரன் ஆகியோர், பள்ளி தலைமையாசிரியர் குமாரராஜாவிடம் தளவாடப் பொருட்களை வழங்கினர்.
குறிப்பாக, 25 'டெஸ்க்' களுடன் கூடிய பென்ச், 40 பிளாஸ்டிக் சேர், 10 ஆசிரியர்களுக் கான மேஜை, 10 நாற்காலி மற்றும் ஒரு கம்ப்யூட்டர் என, 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தளவாடப் பொருட்கள் வழங்கப்பட்டது. மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் உட் பட பலர் கலந்து கொண்டனர்.

