/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூரசம்ஹார திருவிழா இன்று துவக்கம்
/
சூரசம்ஹார திருவிழா இன்று துவக்கம்
ADDED : அக் 31, 2024 10:29 PM
ஆனைமலை; னைமலை அருகே அங்கலகுறிச்சி செல்வமுருகன் கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா வரும், 7ம் தேதி நடக்கிறது.
ஆனைமலை அருகே, அங்கலகுறிச்சி செல்வமுருகன் கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா இன்று துவங்குகிறது. விழாவையொட்டி, மாலை, 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, சிவாச்சாரியார்களுக்கு காப்பு கட்டுதல், செல்வ முருகப்பெருமானுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து, நாளை 2ம் தேதி காலை, 8:30 மணிக்கு மேல், 10:30 மணிக்குள், யாகசாலை பூஜை, திரவியாஹுதி, பூர்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. காலை, 11:00 மணிக்கு செல்வமுருகப்பெருமானுக்கு அபிேஷகம், அலங்காரம், மாலை, 5:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜைகள் நடக்கிறது. இரவு, 7:00 முதல், 8:30 மணிக்குள் சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை நடக்கிறது.
வரும், 3ம் தேதி முதல், 7ம் தேதி வரை தினமும் காலையில்,விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜைகள், காலை, 11:00 மணிக்கு செல்வமுருகப்பெருமானுக்கு மகா அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடக்கின்றன.
வரும், 7ம் தேதி காலை, 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜைகள், காலை, 11:00 மணிக்கு செல்வமுருகப்பெருமானுக்கு மகா அபிேஷகம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு செல்வமுருகர் சூரசம்ஹாரத்துக்கு புறப்படுதல், மாலை,6:30 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.
தொடர்ந்து இரவு, 8:30 மணிக்கு பால் அபிேஷகம், தீபாராதனையும்; 8ம் தேதி காலை, 6:30 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத செல்வமுருகருக்கு மஹா அபிேஷகம் நடக்கிறது. காலை, 9:15 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, திருக்கல்யாண உற்வசம், தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.