/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனசு வையுங்க! உரிய நேரத்துக்கு பஸ் இல்லாததால் பாதிப்பு; தாமதமாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்
/
மனசு வையுங்க! உரிய நேரத்துக்கு பஸ் இல்லாததால் பாதிப்பு; தாமதமாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்
மனசு வையுங்க! உரிய நேரத்துக்கு பஸ் இல்லாததால் பாதிப்பு; தாமதமாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்
மனசு வையுங்க! உரிய நேரத்துக்கு பஸ் இல்லாததால் பாதிப்பு; தாமதமாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்
ADDED : நவ 18, 2024 10:34 PM

பொள்ளாச்சி; 'பஸ் இல்லாததால், சரியான நேரத்துக்கு பள்ளிக்கு செல்ல முடியவில்லை; முறையாக பஸ்கள் இயக்க வேண்டும்,' என, பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர், பா.ஜ.,வினர் மனு கொடுத்து வலியுறுத்தினர்.
பொள்ளாச்சி அருகே, வீரல்பட்டி ஊராட்சியில் இருந்து, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பள்ளி படிப்புக்காக தேவனுார்புதுார், கரட்டுமடத்துக்கு சென்று வருகின்றனர்.
இங்கு இருந்து செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால், பள்ளிக்கு சரியான நேரத்துக்கு செல்ல முடியாது எனக்கூறி பள்ளி மாணவர்கள், பெற்றோர், பா.ஜ.,வினர், சப் - கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.
கூடுதல் பஸ் தேவை
பள்ளி மாணவர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் இருந்து வீரல்பட்டி வழியாக இயங்கி வரும் பஸ், வழித்தட எண், 14/56, கடந்த, இரண்டு மாதங்களாக சரியான நேரத்துக்கு வந்து செல்லாததால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
வீரல்பட்டிக்கு காலை, 8:30 மணிக்கு வர வேண்டிய பஸ், 8:45 மணிக்கு மேல் வருவதால் சரியான நேரத்துக்கு மாணவ, மாணவியர் பள்ளிக்கு செல்ல முடிவதில்லை; காலதாமதம் ஏற்படுகிறது. காலை, மதியம், மாலை என அனைத்து நேரங்களிலும் பஸ் சரியாக வீரல்பட்டிக்கு வருவதில்லை. எனவே, பயணங்களை திட்டமிட்டபடி செல்ல முடியவில்லை.
மேலும், பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடக்கும் போது செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, பஸ் முறையான நேரத்துக்கு இயக்க வேண்டும். கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
ஆட்டோவுக்கு செலவாகுது!
பெற்றோர் கூறியதாவது:
வீரல்பட்டியில் இருந்து சரியான நேரத்துக்கு பஸ் இல்லாததால், பள்ளிக்கு மாணவர்கள் ஒரு வகுப்பு முடிந்த பின்னரே செல்லும் நிலை உள்ளது. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை முறையாக நேரத்துக்கு அனுப்புமாறு அறிவுறுத்துகின்றனர்.
மூன்று கி.மீ., துாரம் நடக்க வைத்து அல்லது வாகனத்தில் அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. ஆட்டோவில் அனுப்ப வேண்டுமென்றால், 100 ரூபாய் செலவாகிறது. தினமும் அன்றாட வேலைக்கு சென்று கிடைக்கும் வருமானத்தில் வாழ்கிறோம்.
இச்சூழலில், ஆட்டோவில் தினமும் அனுப்புவது இயலாத காரியமாகும்.இவ்வழியாக வந்த உடுமலை மப்சல் பஸ்சும் இயக்கப்படுவதில்லை. எனவே, அரசு மனது வைத்து உரிய நேரத்துக்கு பஸ் இயக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

