sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வீரபாண்டி ஊராட்சியில் வரி வசூல் பணி தீவிரம்

/

வீரபாண்டி ஊராட்சியில் வரி வசூல் பணி தீவிரம்

வீரபாண்டி ஊராட்சியில் வரி வசூல் பணி தீவிரம்

வீரபாண்டி ஊராட்சியில் வரி வசூல் பணி தீவிரம்


ADDED : பிப் 16, 2025 11:37 PM

Google News

ADDED : பிப் 16, 2025 11:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், எண். 24 வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட மாங்கரை, ஆனைகட்டி, வீரபாண்டி புதூர், பெரியதடாகம் உள்ளிட்ட பகுதிகளில் வரி வசூல் பணியில் வீரபாண்டி ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

ஊராட்சிகளில் வீட்டு வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, உரிம கட்டணங்களை 'ஆன்லைன்' வாயிலாக செலுத்தும் வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

இதன் வாயிலாக, ஊரக பகுதிகளில் மனை பிரிவுகள், கட்டடம், தொழிற்சாலைகள் தொடங்கவும், தொழில் நடத்துவதற்கான அனுமதிகளும் ஒற்றைச் சாளர முறையில் இணையதளம் வாயிலாக அனுமதி வழங்கப்படுகிறது.

கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் இதர கட்டணங்களை இணைய தளம் வாயிலாகவும் செலுத்தும் வசதி உள்ளது.

இது குறித்து வீரபாண்டி ஊராட்சி செயலாளர் ஆனந்தகுமார் கூறுகையில், ''பொது மக்களின் வசதிக்காக வரி செலுத்த பல்வேறு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

க்யூ ஆர் கோடு, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், ரொக்கம் ஆகியவற்றின் வாயிலாகவும், பொதுமக்கள் வரி இனங்களை செலுத்தலாம்.

ஊராட்சிக்கு உட்பட்ட குக் கிராமங்கள் தோறும் வரி வசூல் பணியில் நேரடியாக ஈடுபடுவதால், பொதுமக்கள் வரி இனங்களை தாமாக முன்வந்து செலுத்தி வருகின்றனர்.

இத்திட்டத்தில் இதுவரை இரண்டு லட்சம் ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.






      Dinamalar
      Follow us