sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 வால்பாறை நகராட்சியில் வரி வசூல் பணிகள் தீவிரம்

/

 வால்பாறை நகராட்சியில் வரி வசூல் பணிகள் தீவிரம்

 வால்பாறை நகராட்சியில் வரி வசூல் பணிகள் தீவிரம்

 வால்பாறை நகராட்சியில் வரி வசூல் பணிகள் தீவிரம்


ADDED : நவ 13, 2025 09:18 PM

Google News

ADDED : நவ 13, 2025 09:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: வால்பாறை நகராட்சியில் வரிவசூல் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.

வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட, 21 வார்டுகளில் மொத்தம், 1,900 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மாத வாடகை அடிப்படையில் 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

வால்பாறை புதுமார்க்கெட்டில் மட்டும் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான கடை வாடகை, சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி உள்ளிட்ட வரியினங்கள் வசூலிக்கும் பணியில், நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வால்பாறை நகராட்சி கமிஷனர்(பொ) குமரன் உத்தரவின் பேரில், புதுமார்க்கெட் பகுதியில், நகராட்சி ஊழியர்கள் நேற்று தீவிர வரிவசூலில் ஈடுபட்டனர்.

நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறை நகராட்சியில் வளர்ச்சி பணிகளை விரைந்து மேற்க்கொள்ளும் வகையில், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை முன் கூட்டியே செலுத்த வேண்டும்.

நகராட்சி அலுவலகத்தில் செயல்படும் வரிவசூல் மையத்தில் நேரடியாக செலுத்தி, ரசீது பெற்றுக்கொள்ளலாம். தவறும் பட்சத்தில் கடைகள் பூட்டி 'சீல்' வைப்பதோடு, குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us