ADDED : ஆக 11, 2025 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு; ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார், 39, கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றுகிறார். இவர், நேற்று காலையில் பைக்கில், கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் அருகே கொண்டம்பட்டி ரோட்டை 'ஒன் வே' திசையில் கடந்து சென்றார்.
அப்போது, எதிரே காஸ் லாரி வருவதை கவனிக்காமல் சென்றதால், லாரி மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், அஜித்குமார் காயமடைந்தார். கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.