/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மொழிப்போர் நினைவுச்சாலை பெயரிடணும்!
/
மொழிப்போர் நினைவுச்சாலை பெயரிடணும்!
ADDED : ஜன 23, 2026 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: நாம் தமிழர் கட்சி மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கிருட்டிணகுமார் மற்றும் நிர்வாகிகள், சப்-கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
மனுவில், பொள்ளாச்சியில், 1965 பிப். 12ல், மொழிப்போரில் உயிர் தியாகம் செய்துள்ளனர். எனவே, பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்டிற்கு, மொழிப்போர் நினைவு பஸ் ஸ்டாண்ட் என்றும், தேர்நிலையம் - தலைமை தபால் அலுவலக சாலைக்கு, மொழிப்போர் நினைவுச்சாலை என பெயரிட வேண்டும்.
அரசு மருத்துவமனை எதிரே உள்ள ரவுண்டானாவில், மொழிப்போர் நினைவுச்சின்னம் எழுப்ப வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

