sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பெருமாள் கோவில்களில் 10ல் சொர்க்கவாசல் திறப்பு நாளை துவங்குகிறது வைகுண்ட ஏகாதசி விழா

/

பெருமாள் கோவில்களில் 10ல் சொர்க்கவாசல் திறப்பு நாளை துவங்குகிறது வைகுண்ட ஏகாதசி விழா

பெருமாள் கோவில்களில் 10ல் சொர்க்கவாசல் திறப்பு நாளை துவங்குகிறது வைகுண்ட ஏகாதசி விழா

பெருமாள் கோவில்களில் 10ல் சொர்க்கவாசல் திறப்பு நாளை துவங்குகிறது வைகுண்ட ஏகாதசி விழா


ADDED : ஜன 07, 2025 11:02 PM

Google News

ADDED : ஜன 07, 2025 11:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நிருபர் குழு -

பொள்ளாச்சி, உடுமலையில் உள்ள பெருமாள் கோவில்களில், நாளை வைகுண்ட ஏகாதசி விழா துவங்குகிறது; 10ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, கடந்த, 31ம் தேதி, பகல்பத்து உற்சவத்துடன் துவங்கியது.

தினமும், திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, திருச்சந்த விருத்தம், பெரிய திருமொழி சேவை மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார பூஜைகள் நடந்தன.

நாளை, பத்தாம்நாள் திருவிழாவும், பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம் சேவை நடக்கிறது. வரும், 10ம் தேதி அதிகாலை, நம்பெருமாளுக்கு, பல்வேறு திரவியங்களால் திருமஞ்சனம், அலங்கார பூஜைகள் நடக்கிறது. காலை, 5:00 மணிக்கு, பரமபதவாசல் திறப்பு மற்றும் ஸ்ரீ வேங்டேச பெருமாள் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து, ராப்பத்து உற்சவமும், தினமும், பெருமாள் ஆழ்வார் புறப்பாடும், 19ம் தேதி, நம்மாழ்வார் மோட்சம் நடக்கிறது.

* பொள்ளாச்சி கடைவீதி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதில், வைகுண்ட ஏகாதசி விழா வரும், 10ம் தேதி நடக்கிறது. நாளை (9ம் தேதி) விழா துவங்குகிறது. நாளை முதல், 11ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மூலஸ்தானத்தில் மூலவருக்கு முத்தங்கி சேவை நடைபெறுகிறது.

வரும், 10ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு மேல், 5:00 மணிக்குள் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. சொர்க்கவாசலில் கட்டுவதற்கு காய், கனிகள், திரவிய பொருட்கள் அனைத்தும் நாளை (9ம் தேதி) காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை கோவிலில் வழங்கலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

* ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா வரும், 10ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி நாளை காலை, 10:31 மணிக்கு திருமஞ்சன சேவை, அலங்கார சேவை நடைபெறுகிறது.வரும், 10ம் தேதி அதிகாலை, 4:50 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு, சிறப்பு அலங்காரம், பூஜைகள், மஹா தீபாராதனை, தரிசன நிகழ்ச்சி நடக்கிறது.11ம் தேதி மதியம், 12:31 மணிக்கு அலங்காரம், தீபாராதனை, அன்ன பிரசாதம் வழங்கப்படுகிறது.

* டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், வரும், 10ம் தேதி காலை, 4:00 மணிக்கு கோவில் பிரகாரத்தில், உற்சவர் புறப்பாடுடன் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.






      Dinamalar
      Follow us