sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 ஆனைமலை பகுதியில் இளநீர் விலை ரூ.23 நிர்ணயம்

/

 ஆனைமலை பகுதியில் இளநீர் விலை ரூ.23 நிர்ணயம்

 ஆனைமலை பகுதியில் இளநீர் விலை ரூ.23 நிர்ணயம்

 ஆனைமலை பகுதியில் இளநீர் விலை ரூ.23 நிர்ணயம்


ADDED : டிச 08, 2025 05:39 AM

Google News

ADDED : டிச 08, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலையை ஒப்பிடுகையில், 23 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி, உடுமலை, ஆனைமலை பகுதியில், தென்னை விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில் இளநீர் முக்கிய இடத்தை வகிக்கிறது.

வடமாநிலங்களில் இளநீருக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. இதனை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். இதனால், அங்கு இது அனுப்பப்படுகிறது.

ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீர் விலை, 23 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 10,000 ரூபாய். வட மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் குளிரான தட்பவெப்ப நிலை நிலவுகிறது. தென்மாநிலங்களில், பரவலாக மழை பெய்து வருகிறது. இச்சூழலில், இளநீர் வரத்தும் அதிகமாக இருப்பதால், இளநீர் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, சீனிவாசன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us