sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பால் மனம் குளிர்ந்தது! பாசனத்துக்கு தடையின்றி கிடைத்ததால் மகிழ்ச்சி

/

ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பால் மனம் குளிர்ந்தது! பாசனத்துக்கு தடையின்றி கிடைத்ததால் மகிழ்ச்சி

ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பால் மனம் குளிர்ந்தது! பாசனத்துக்கு தடையின்றி கிடைத்ததால் மகிழ்ச்சி

ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பால் மனம் குளிர்ந்தது! பாசனத்துக்கு தடையின்றி கிடைத்ததால் மகிழ்ச்சி


ADDED : நவ 20, 2024 10:25 PM

Google News

ADDED : நவ 20, 2024 10:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி ; பொள்ளாச்சி அருகேயுள்ள, ஆழியாறு அணையில் இருந்து பழைய மற்றும், புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆழியாறு பாசனப்பகுதிகளில், பொள்ளாச்சி கால்வாய், வேட்டைக்காரன்புதுார் கால்வாய், சேத்துமடை கால்வாய், ஆழியாறு பீடர் கால்வாய் ஆகிய பாசனப்பகுதிகளில், மொத்தம் 44 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

ஆண்டுதோறும் பாசனத்துக்கு, 'அ' மண்டலம், 'ஆ' மண்டலம் என பிரிக்கப்பட்டு கால்வாய் வழியாக நீர் வினியோகிக்கப்படுகிறது.

கடந்தாண்டு பருவமழை பற்றாக்குறையால், பாசனத்துக்கு நீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. நிலை பயிர்களை காப்பாற்ற தண்ணீர் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்தாண்டு பருவமழை கை கொடுத்ததால் கடந்த சில மாதங்களாக அணை முழு கொள்ளளவில் காட்சியளிக்கிறது. இதனால், பாசனத்துக்கு தடையின்றி நீர் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.

விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, ஆழியாறு பழைய, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசுக்கு நீர்வளத்துறை வாயிலாக கருத்துரு அனுப்பப்பட்டது. அதன்படி, தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.

பழைய பாசனம்


பழைய ஆயக்கட்டு பாசனத்தில் இரண்டாம் போக சாகுபடிக்காக, நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. அதில், 6,400 ஏக்கர் நிலங்கள் இரண்டாம் போக பாசனம் பெறுகிறது. வரும், 2025ம் ஆண்டு ஏப்., 15ம் தேதி வரை 146 நாட்களுக்கு, 1,089 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படுகிறது.

புதிய பாசனம்


ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்தில், பொள்ளாச்சி கால்வாய், 'அ' மண்டலம், வேட்டைக்காரன்புதுார் கால்வாய், 'ஆ' மண்டலம், சேத்துமடை கால்வாய், 'அ' மண்டலம், ஆழியாறு ஊட்டுக்கால்வாய், 'அ' மண்டலம் என மொத்தம், 22,116 ஏக்கர் பாசன பகுதிகளுக்கு, வரும், 2025 ஏப்., 4ம் தேதி வரை, 135 நாட்களுக்கு உரிய இடைவெளி விட்டு, ஆழியாறு அணையில் இருந்து, 2,709 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. அரசு உத்தரவுப்படி நேற்று புதிய, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

தண்ணீர் திறப்பில், எம்.பி., ஈஸ்வரசாமி, ஆழியாறு நீர்தேக்க திட்டக்குழு தலைவர் செந்தில், கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன், செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் சிங்காரவேலு, உதவி பொறியாளர் கோகுல்கார்த்திக் மற்றும் அதிகாரிகள், திட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

விவசாயிகள் நம்பிக்கை


கடந்தாண்டு பருவமழை பொய்த்ததால், பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டது. நடப்பாண்டு போதிய பருவமழை பெய்ததால் அணைகள் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்தது.

ஆழியாறு அணையில் இருந்து, வெளியேற்றப்பட்ட உபரி நீர், குளம், குட்டைகளுக்கு திறக்கப்பட்டதால், நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.

பாசனத்துக்கு தண்ணீர் திறப்பால் இந்தாண்டு தடையின்றி சாகுபடி செய்து பயன்பெற முடியும் என, விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us