/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெளியே போகாத ரவுடி 'உள்ளே' போனார்
/
வெளியே போகாத ரவுடி 'உள்ளே' போனார்
ADDED : ஜன 25, 2025 11:02 PM
கோவை: மாநகரில் இருந்து வெளியேற வேண்டும் என்ற, போலீஸ் கமிஷனரின் உத்தரவை மீறிய நபரை, போலீசார் கைது செய்தனர்.
கோவை மாநகர பகுதியில் குற்றச்சம்பவங்களை குறைக்கவும், மாநகரை அமைதியானதாக வைத்திருக்கும் வகையிலும், தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர்களையும், பொது மக்களை அச்சுறுத்தி வரும் நபர்களையும், மாநகரில் இருந்து வெளியேற்ற போலீஸ் கமிஷனர் திட்டமிட்டார்.
அதன்படி, மெட்ராஸ் சிட்டி போலீஸ் சட்டம் 51 ஏ கீழ் முதற்கட்டமாக 27 ரவுடிகளை மாநகர பகுதிகளில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டது.
27 ரவுடிகளில், செல்வபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த சஞ்சய் குமாரும், 24 ஒருவர்.
கமிஷனர் பிறப்பித்த உத்தரவை மீறி, சஞ்சய்குமார் மாநகர பகுதிகளில் குற்றச்சம்பவங்களில் ஈடு பட்டு வந்தது போலீசாருக்கு தெரியவந்தது. செல்வபுரம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.
பொது அமைதியை கெடுக்கும் வகையில், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் எச்சரித்தார்.