sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'தினமலர்' நாளிதழின் பள்ளி வழிகாட்டி 2025 கோவையில் வரும் 15, 16ல் நடக்கிறது

/

'தினமலர்' நாளிதழின் பள்ளி வழிகாட்டி 2025 கோவையில் வரும் 15, 16ல் நடக்கிறது

'தினமலர்' நாளிதழின் பள்ளி வழிகாட்டி 2025 கோவையில் வரும் 15, 16ல் நடக்கிறது

'தினமலர்' நாளிதழின் பள்ளி வழிகாட்டி 2025 கோவையில் வரும் 15, 16ல் நடக்கிறது


ADDED : பிப் 08, 2025 11:40 PM

Google News

ADDED : பிப் 08, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : சிறந்த பள்ளியை தேர்ந்தெடுப்பதற்கான 'தினமலர்'நாளிதழின் பள்ளி வழிகாட்டி, 2025 நிகழ்ச்சி வரும், 15, 16 ம் தேதிகளில் நடக்கிறது.

சவால்கள் நிறைந்த இன்றைய தொழில்நுட்ப உலகில் துவக்க கல்வியை பிள்ளைகளுக்கு அமர்க்களமாக அமைத்து தரவேண்டும் என்ற விருப்பம் அனைத்து பெற்றோர்களுக்கும் உள்ளது. வாழ்வில் மட்டுமின்றி சமூகத்திலும் தங்கள் பிள்ளைகள் வெற்றி பெற்று மிளிர வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடி, ஆடி பெற்றோர் உழைக்கின்றனர். தனது குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை தர பள்ளியை தேர்வு செய்வதில் பெற்றோருக்கு பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன.

கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் பள்ளியா, விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பள்ளியா, எந்தப்பள்ளியை தேர்ந்தெடுப்பது என்ற சந்தேகம் மனதில் எழாமல் இல்லை. யாரிடமாவது ஆலோசனை கேட்கலாம் என்றால், அவர்கள் தரும் செய்தியில் பெற்றோர்களுக்கு குழப்பம் அதிகரிக்கவே செய்கிறது.

பள்ளிக்கூடம் வாழ்வின் முதல் தடம். சரியான துவக்கப்பள்ளியை தேர்ந்தெடுப்பது பிள்ளைகளின் நல்ல எதிர்காலத்துக்கான துவக்கப்புள்ளி. பள்ளிக் கல்லுாரி மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்ட 'தினமலர்' நாளிதழ் இதற்கும் வழிகாட்டுகிறது. 'தினமலர்' நாளிதழ், எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள் சார்பில், பள்ளி வழிகாட்டி, 2025 நிகழ்ச்சி வரும், 15, 16ம் தேதிகளில் நடக்க உள்ளது.

கோவை அவிநாசி ரோடு சுகுணா திருமண மண்டபத்தில் காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது. கொங்கு மண்டலத்திலுள்ள மிகச்சிறந்த பள்ளிகள், அனைத்தின் சிறப்பையும், நீங்கள் ஒரே கூரையின் கீழ், கண்டுணர்ந்து தெளிவு பெறலாம்.

நிகழ்ச்சியில், 25க்கும் மேற்பட்ட பள்ளிகளின் அரங்குகள் இடம்பெறுகின்றன. இவற்றில் பள்ளிகளின் சிறப்பு அம்சங்களை தெரிந்து கொள்ளலாம். நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம்.

நிகழ்ச்சியை, நேஷனல் மாடல் பள்ளி இணைந்து வழங்குகிறது. இணை ஸ்பான்சர்களாக அத்வைத் அகாடமி, பிரிட்ஜ்உட்ஸ் சர்வதேச பள்ளி, மான்செஸ்டர் சர்வதேச பள்ளி ஆகியோர் உள்ளனர்.






      Dinamalar
      Follow us