sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கட்டடம் இருக்கு... போதிய டாக்டர்கள் இல்லை! அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை தேவை

/

 கட்டடம் இருக்கு... போதிய டாக்டர்கள் இல்லை! அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை தேவை

 கட்டடம் இருக்கு... போதிய டாக்டர்கள் இல்லை! அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை தேவை

 கட்டடம் இருக்கு... போதிய டாக்டர்கள் இல்லை! அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை தேவை


ADDED : நவ 27, 2025 01:43 AM

Google News

ADDED : நவ 27, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: வால்பாறை அரசு மருத்துவமனையில், டாக்டர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வால்பாறை அரசு மருத்துவமனையில், நகர் மற்றும் எஸ்டேட் பகுதி மக்கள் சிகிச்சை பெறுகின்றனர். அரசு மருத்துவமனையில் 12 டாக்டர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் தற்போது, நான்கு டாக்டர்கள் மட்டுமே உள்ளனர்.

மகப்பேறு மருத்துவர், மயக்க மருந்து மருத்துவர், எலும்பு சிகிச்சை டாக்டர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவே உள்ளன.இதனால், நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது தவிர, செவிலியர்கர்ள், சமையலர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களும் காலியாகவே உள்ளன. இதனால், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறை அரசு மருத்துவமனை, 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்பட்டு, மக்கள் பயன்பாட்டில் உள்ளது. ஆனால், பில்டிங் மட்டும் தான் பெரியதாக உள்ளது. போதிய டாக்டர்கள், டெக்னீசியன்கள் இல்லை.

இதனால் எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. குறைவான டாக்டர்கள் பணியில் உள்ளதால், நோயாளிகள் பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது.

குறிப்பாக, விபத்து காலங்களில் போதிய டாக்டர் இல்லாததால், பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக பொள்ளாச்சி, கோவை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இதனால், சில நேரங்களில் வழியிலேயே நோயாளிகள் இறந்து விடும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

எனவே, வால்பாறை மலைப்பகுதியில் வசிக்கும் மக்களின் நலன் கருதி அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us