ADDED : அக் 13, 2024 10:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை ஒப்பிடுகையில் எந்த மாற்றமும் கிடையாது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையுடன் ஒப்பிடுகையில் எந்த மாற்றமும் இன்றி, 41 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதேபோல, ஒரு டன் இளநீரின் விலை, 16,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இளநீருக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, இளநீரை குறைந்த விலைக்கு விற்க வேண்டாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.